மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மத்திய இணைப்பு
மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மத்திய இணைப்பு அல்லது மத்திய இணைப்பு விரைவுச்சாலை இந்த விரைவுச்சாலை சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சா ஆலாம் நகருக்கும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள நீலாய் நகருக்கும் இடையே செல்கிறது.[1] இந்த விரைவுச் சாலையானது; புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இடங்களுக்கான முதன்மை அணுகல் பாதையாகவும் செயல்படுகிறது.[2] பொதுவடக்கு-தெற்கு விரைவுசாலை (மலேசியா) எனும் மலேசியாவின் பிரதான விரைவுச்சாலையில் இரு பிரிவுகள் உள்ளன.
இந்த இரு பிரிவுகளையும் மத்திய இணைப்பு விரைவுச்சாலை இணைத்துச் செல்கிறது. அந்த வகையில் மாநிலங்களைக் கடந்து (Interstate Traffic); வடக்குப் பகுதிக்குச் செல்லும் வாகனங்களும்; தெற்குப் பகுதிக்குச் செல்லும் வாகனங்களும்; கோலாலம்பூர் மாந்கரத்திற்குள் செல்லாமல் கடந்து செல்ல முடியும். வாகனங்கள் கோலாலம்பூர் மாநகரத்திற்குள் செல்வதைத் தவிர்ப்பதற்காகவும்; கோலாலம்பூரில் வாகன நெரிசலைக் குறைப்பதற்காகவும் இந்த மத்திய இணைப்பு விரைவுச்சாலை 1996-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. வரலாறுவடக்கு-தெற்கு விரைவுசாலைக்கான புதிய விரைவுச்சாலை (மத்திய இணைப்பு விரைவுச்சாலை) அமைப்பது பற்றி 1994-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. 1994 மார்ச் மாதம் மத்திய இணைப்பு விரைவுச்சாலையின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. 1997 ஆகஸ்டு மாதம் நிறைவடைந்தது. முதல் பகுதி, சா ஆலாம் மற்றும் யூ.எஸ்.ஜே. (USJ) சுபாங் ஜெயா நகரங்களுக்கு இடையில், 1996 ஜூன் மாதம் திறக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் புத்ராஜெயா இணைப்பு1997 அக்டோபர் மாதம், மத்திய இணைப்பு விரைவுச்சாலையின் எஞ்சிய பகுதி, போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. 2000-ஆம் ஆண்டில் புத்ராஜெயா நகருக்கான இணைப்பு திறக்கப்பட்டது. 2013 பிப்ரவரி 28-ஆம் தேதி, மத்திய இணைப்பு விரைவுச் சாலையின், புத்ராஜெயா இணைப்பில் பண்டார் நுசா புத்ராவுக்குச் செல்லும் சந்திப்பில் முழுமை அடையாத ஒரு பாலம் தண்ணீர் குழாய் கசிவு காரணமாக இடிந்து விழுந்தது. உயிர்ச் சேதமோ காயமோ ஏற்படவில்லை. காட்சியகம்
மேற்கோள்கள்
மேலும் பார்க்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia