சந்தூர் சமஸ்தானம்
சந்தூர் சமஸ்தானம் (Sandur State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால கர்நாடகா மாநிலத்தின் பெல்லாரி மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. இதன் தலைநகரம் சந்தூர் நகரம் ஆகும். [2]1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சந்தூர் சமஸ்தானம் 433 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,200 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. வரலாறுசந்தூர் சமஸ்தானம் கிபி 1731-ஆம் ஆண்டு முதல் மராத்திய பிராமணர்கள் ஆட்சி செய்தனர்.[3] 1776 – 1790-ஆம் ஆண்டுகளில் சந்தூர் சமஸ்தானப் பகுதிகள் மைசூர் இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1817-ஆம் ஆண்டில் மராத்தியப் பேரரசின் கீழ் சந்தூர் சமஸ்தானத்தை இணைக்கப்பட்டது. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சந்தூர் சமஸ்தான மன்னர்கள், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். சந்தூர் சமஸ்தானம் சென்னை மாகாணத்தின் ஆளுநரின் கீழ் செயல்பட்டது. 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இராச்சியம் 1 ஏப்ரல் 1949 அன்று சென்னை மாகாணத்துடன் இணக்கப்பட்டது. 1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, சந்தூர் சமஸ்தானம் கர்நாடகா மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்[[[பகுப்பு:மராத்தியப் பேரரசு]] |
Portal di Ensiklopedia Dunia