மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (North–South Expressway Malaysia (NSE), (மலாய் மொழி: Lebuhraya Utara-Selatan Malaysia) என்பது மலேசியாவின் மிக நீண்ட விரைவுச்சாலை ஆகும். இதன் கட்டுமானப் பணிகள் 1988-ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டன.
1995-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த விரைவுச்சாலை, 15 மாதங்களுக்கு முன்னதாகவே 1994 பிப்ரவரி மாதம் கட்டி முடிக்கப்பட்டது.[1]
1994 செப்டம்பர் 8-ஆம் தேதி, மலேசியப் பிரதமர் மகாதீர் பின் முகமது அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார்.[1]
தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கரையில் இருக்கும் பல முக்கிய மாநகரங்களையும், நகரங்களையும் இணைக்கும் இந்த விரைவுச்சாலை, தீபகற்ப மாநிலங்களின் முதுகெலும்பாகவும் விளங்குகிறது.
இது "பிளஸ்" விரைவுச்சாலை (PLUS Expressway) எனவும் அழைக்கப்படுகிறது. Projek Lebuhraya Utara Selatan என்பதன் சுருக்கமே "பிளஸ்" என்பதாகும்.[2]
ஏற்கனவே இருக்கும் பழைய கூட்டரசு சாலைக்கு (Federal Route 1) மாற்றுவழியாக இந்த விரைவுசாலை அமைகிறது. AH2 எனும் ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது.
மேலோட்டம்
வடக்கு-தெற்கு விரைவுசாலை சில முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வடக்கு-தெற்கு விரைவுசாலையின் வட பகுதி பாதை, கெடா, புக்கிட் காயூ ஈத்தாம் சிறுநகரில் இருந்து கோலாலம்பூர் வரை செல்கிறது. இடையில் பினாங்கு பாலத்துடன் ஒருங்கிணைகிறது.[4]
நெடுஞ்சாலை
நெடுஞ்சாலையுடன் இணைந்து AH2 வடக்கு தெற்கு இணைப்பு
நெடுஞ்சாலை பட்டர்வொர்த்கூலிம் விரைவுசாலை பினாங்கு பாலம் AH2 வடக்கு-தெற்கு விரைவுசாலையின் மத்திய இணைப்பு எலைட்(ELITE)
இரண்டாவது இணைப்பு விரைவுசாலை Second Link Expressway
AH2 ஸ்கூடாய் நெடுஞ்சாலை (1 March 2004 வரையில்); ஜொகூர் - சிங்கப்பூர் தரைப்பாலம்
கூட்டரசு நெடுஞ்சாலை 2
பலவழி சாலைகள்
பொதுவாக, வடக்கு-தெற்கு விரைவுசாலை நான்கு வழிகள் அமைந்ததாக இருக்கும். போவதற்கு இரு வழிகள்; வருவதற்கு இரு வழிகள். சில இடங்களில் போக்குவரத்து மிகுதியாக இருக்கும். அவ்வாறான இடங்களில் போவதற்கு 3 வழிகள்; வருவதற்கு 3 வழிகள். மொத்தம் 6 வழிகள். சில இடங்களில் போவதற்கு 4 வழிகள்; வருவதற்கு 4 வழிகள்; மொத்தம் 8 வழிகள். அவற்றின் விவரங்கள்:
ஆறுவழி சாலைகள்
வடக்கு-தெற்கு விரைவுசாலை தென்பகுதி - சுங்கை பீசியில் தொடங்கி ஆயர் குரோ வரையில்
புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுசாலை - புக்கிட் ராஜா (சிலாங்கூர்) பகுதியில் தொடங்கி ஷா ஆலாம் வரையில்
வடக்கு-தெற்கு விரைவுசாலை வடபகுதி - ரவாங்கில் தொடங்கி சிலிம் ரீவர் வரையில்
வடக்கு-தெற்கு விரைவுசாலை வடபகுதி - சுங்கை டூவாவில் தொடங்கி ஜூரு வரையில்
வடக்கு-தெற்கு விரைவுசாலை மத்திய இணைப்பு - ஷா ஆலாம் தொடங்கி நீலாய் வரையில்
இரண்டாம் இணைப்பு விரைவுசாலை - ஆயர் ராஜா விரைவுசாலை தொடங்கி சிங்கப்பூர் வரையில்
மார்ச் 9, 2007 - 6 பயணிகள், பேராக் மெனோரா சுரங்கப் பாதைக்கு அருகே ஒரு பஸ் விபத்தில் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட் 13, 2007 - 20 பேர் பேராக் சங்காட் ஜெரிங் அருகே ஒரு பஸ் விபத்தில் கொல்லப்பட்டனர்.
மார்ச் 27, 2008 - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிங்கப்பூரியர்கள், ஜொகூர் தங்காக் அருகே விபத்தில் கொல்லப்பட்டனர். 2 மாத குழந்தை உயிர் தப்பியது.
டிசம்பர் 7, 2008 - 10 பயணிகள் ஜொகூர், தங்காக் - பாகோ ஒரு பஸ் விபத்தில் கொல்லப்பட்டனர்.[8]
ஏப்ரல் 13, 2009 - ஆறு பேர் சிலாங்கூர், ரவாங் அருகே இருதள விரைவு பேருந்து விபத்தில் கொல்லப்பட்டனர்.[9]
டிசம்பர் 26, 2009 - பேராக், ஈப்போ அருகே பத்து பேர் கொல்லப்பட்டனர். இருவர் படுகாயமடைந்தனர்.[10]
அக்டோபர் 10, 2010 - இரு பேருந்துகள் மோதிக் கொண்டன. பன்னிரண்டு பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.[11]
ஏப்ரல் 17 2014 - வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான கர்பால் சிங் பேராக், கம்பார் அருகில், கோலாலம்பூரில் இருந்து பினாங்கு நகருக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது ஒரு விபத்தில் கொல்லப்பட்டார்.[12]
டிசம்பர் 8 2014 - ஒரு விரைவு பேருந்தும் ஒரு கனரக சுமையுந்தும் மோதிக் கொண்டதில் மூவர் கொல்லப்பட்டனர்.[13]