சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை
மலேசிய கூட்டரசு சாலை 15 அல்லது சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 15; மலாய்: Laluan Persekutuan Malaysia 15 என்பது தீபகற்ப மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கூட்டரசு சாலையாகும். 21.82 கி.மீ. (13.56 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் மிக முக்கியமான சாலையாக அறியப்படுகிறது. சுபாங் வானூர்தி நிலைய நெடுஞ்சாலை என்பது சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலைய நெடுஞ்சாலை எனவும் அடையாளப்படுத்தப் படுகிறது. சுபாங்கில் உள்ள கம்போங் மெலாயு சுபாங் எனும் கிராமப்பகுதியில் தொடங்கும் இந்தச் சாலை, சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம் தொடங்கி இஸ்கைபார்க் வரை ஒரு முக்கிய இணைப்பை வழங்கி சுபாங் ஜெயாவில் முடிவடைகிறது.[1] அமைவுமலேசிய கூட்டரசு சாலை 15-இன் கிலோமீட்டர் 0 (Kilometre Zero) என்பது சுபாங் ஜெயாவில் உள்ளது. மலேசிய கூட்டரசு சாலை 15-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. சிறப்புக் கூறுஇந்த நெடுஞ்சாலை 1999 வரை செம்பனை மரங்கள் மற்றும் ரப்பர் மரங்களால் சூழப்பட்டு இருந்தது. தற்போது அங்கு ஆரா டாமன்சாரா போன்ற புதிய நகரப் பகுதி உருவாகியுள்ளது. விளக்கம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia