எமகண்டம்
எமகண்டம் இந்த நேரம் எமனுக்கு ஏற்ற நேரமாக கருதப்படுகிறது. ராகு காலம் போன்றே இந்த நேரமும் கெட்ட நேரமாக கருதப்படுகிறது. எமனால் ஆளப்படுகின்ற ஒன்றரை மணி நேரம் எமகண்டம் என்றழைக்கப்படுகிறது[1]. இந்த நேரத்திலும் சுபகாரியங்களை தொடங்க கூடாது. ராகு காலம், எமகண்டத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் போன்றவற்றை செய்ய கூடாது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் ராகு, கேது பூஜை செய்யலாம். இந்த பூஜையின் மூலம் திருமணத்தடை, கல்வித்தடை போன்றவை விலகும். குரு பகவானின் புதல்வன் எமன் என்பதால், எமகண்ட நேரத்தை முதலில் வியாழக் கிழமையில் இருந்து முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படியே நாட்களை பின்னோக்கி புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு, சனி, வெள்ளி என நினைவில் வைத்துக் கொண்டு நேரத்தை வரிசையாக நினைவில் வைத்துக் கொள்ளலாம். எமகண்ட நேரம் :
மேலும் காண்க
|
Portal di Ensiklopedia Dunia