இரண்டாம் அமென்கோதேப்
இரண்டாம் அமென்கோதேப் (Amenhotep II) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் ஏழாம் பார்வோன் ஆவார். இவர் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1421 முதல் கிமு 1407 முடிய 26 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். இவர் தெற்கு எகிப்தின் நூபியா மற்றும் பண்டைய அண்மை கிழக்கின் மித்தானி இராச்சியம், பாபிலோன் மற்றும் இட்டைட்டு பேரரசுகளை வென்று திறை வசூலித்தார்.[2] கர்னாக் போன்ற இடங்களில் உள்ள சிறிய கோயில்களை சீரமைத்து பெரிதாகக் கட்டினார். இவரது கல்லறைக் கோயில் 1898-இல் விக்டர் லோரட் என்பவரால் தீபை நகரத்தின் அருகே உள்ள மன்னர்களின் சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.[3][4] பார்வோன்களின் அணிவகுப்பு3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் இரண்டாம் அமென்கோதேப் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [5][5] படக்காட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia