மெர்நெப்தா
மெர்நெப்தா (Merneptah or Merenptah) (ஆட்சிக் காலம்: கிமு 1213 – கிமு 1203) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட பத்தொன்பதாம் வம்சத்தின் நான்காம் பார்வோன் ஆவார். இவர் புது எகிப்திய இராச்சியதை கிமு 1213 முதல் கிமு 1203 வரை 10 ஆண்டுகள் ஆண்டார்.[2]இவர் இரண்டாம் ராமேசேசின் 13-வது குழந்தை ஆவார்.[3] இவரது அரியணைப் பெயர் பா-ரெ-மெரி-நெத்ஜெரு (Ba-en-re Mery-netjeru) ஆகும். பண்டைய எகிப்திய மொழியில் இதன் பொருள் எகிப்தியக் கடவுள் இராவின் ஆன்மா மற்றும் கடவுள்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன் எனப்பொருளாகும். இவருக்குப் பின் எகிப்தை ஆட்சி செய்தவர் இவரது மகன் இரண்டாம் சேத்தி ஆவார். பார்வோன்களின் அணிவகுப்பு3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் மெர்நெப்தாவின் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [4][4] ![]()
இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia