இந்த கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவை (KLIA Transit) அனைத்து தொடருந்து நிலையங்களிலும் நின்று செல்லும் சேவையை வழங்குகிறது. அதே வேளையில், இதன் நட்புச் சேவையான கேஎல்ஐஏ விரைவுத் தொடருந்து(KLIA Ekspres) சேவை; கோலாலம்பூர் சென்ட்ரல் மற்றும் கேஎல்ஐஏ T1; கேஎல்ஐஏ T2 ஆகிய நிலையங்களுக்கு மட்டும் நேரடிச் சேவையில் ஈடுபடுகிறது.
24 ஆகஸ்டு 2010 அன்று, கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் இரு கேஎல்ஐஏ தொடருந்துகள் மோதிக் கொண்டன. அதுவே கேஎல்ஐஏ போக்குவரத்துச் சேவையின் முதல் விபத்து ஆகும். அந்த விபத்தில் 3 பயணிகள் காயமடைந்தனர்.
கேஎல்ஐஏ
கேஎல்ஐஏ (KLIA) என்பது கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் (Kuala Lumpur International Airport) சுருக்கமாகும். கேஎல்ஐஏ, மலேசியாவின் பிரதான வானூர்தி நிலையம் ஆகும். மேலும் தென்கிழக்காசியாவின் முக்கிய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. கேஎல்ஐஏ(KLIA) என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்றது.
20-ஆம் நூற்றாண்டில், உலகின் தொழில்நுட்ப அதிசயங்களில் ஒன்றாக இந்த வானூர்தி நிலையம் அறியப் படுகின்றது. இந்த வானூர்தி நிலையத்தின் முழுமையான செயல்பாடுகளும் கணினி தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன.
அதிவிரைவு தொடருந்துச் சேவை
மலேசியத் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து ஏறக்குறைய 65 கி.மீ தொலைவில் சிலாங்கூர் மாநிலத்தின் சிப்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ளது. அதிவிரைவு தொடருந்துச் சேவையின் வழி, இந்தப் பன்னாட்டு நிலையத்தை 28 நிமிடங்களில் சென்று அடையும் வகையில் நவீனமான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் பன்னாட்டு நிலையம் 27 சூன், 1998-இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டது. இதை அமைக்க 3.5 பில்லியன்அமெரிக்க டாலர்கள்; ஏறக்குறைய 12 பில்லியன் மலேசிய ரிங்கிட் செலவாயிற்று. ஒவ்வோர் ஆண்டும் 35 மில்லியன் பயணிகள் இந்த வானூர்தி நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையத்தின் வழியாக 1.2 மில்லியன்டன்கள் சரக்குகளும் கொண்டு செல்லப் படுகின்றன.
கேஎல்ஐஏ போக்குவரத்து அறிமுகம் செய்துள்ள மனித உள்ளீடு இல்லாத கடவு அட்டை (Touchless Smart Card)இடமிருந்து வலமாக: ஆறாவது தடம் கேஎல்ஐஏ போக்குவரத்து பய்ன்படுத்தும் தடமாகும்