பரூக்காபாத்
பரூகாபாத் (Farrukhabad), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பரூகாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். பரூகாபாத் மாநகராட்சிப் பகுதியில் பதேகர் இராணுவப் பாசறை மன்றமும் உள்ளது. கங்கை ஆற்றின் கரையில் அமைந்த பரூகாபாத் நகரம், மாநிலத் தலைநகரானா லக்னோவிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவிலும்; தில்லியிலிருந்து 338 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி பரூகாபாத் மாநகரத்தின் மக்கள் தொகை 2,76,581 ஆகும். அதில் 1,45,641 ஆண்கள் மற்றும் 1,30,940 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 73.44% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 74.23%, இசுலாமியர் 24.67%, கிறித்தவர்கள் 0.59% மற்றும் பிறர் 0.51% ஆகவுள்ளனர்.[2] போக்குவரத்துபரூகாபாத் சந்திப்பு இரயில் நிலையம்[3]நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia