சம்பல் நகரம்
சம்பல் (Sambhal) (ⓘ), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். புது தில்லிக்கு கிழக்கே 165 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[4]மேலும் மாநிலத் தலைநகரான லக்னோவிற்க்கு வடகிழக்கில் சம்பல் நகரம் உள்ளது. இங்கு மன்னர் பாபர் நிறுவிய சாஹி ஜுமா பள்ளிவாசல் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளும், வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 2,21,334 ஆகும். அதில் ஆண்கள் 116,008 மற்றும் பெண்கள் 105,326 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 936 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 34,279 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 49.51% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 22.00%, இசுலாமியர் 77.67% மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.[5] சம்பல் ஹதிம் சராய் தொடருந்து நிலையம் தில்லி, லக்னோ, கான்பூர், அலகாபாத், அயோத்தி, வாரணாசி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.[6] பொருளாதாரம்மெந்தால் எண்ணெய் இந்நகரத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது.[7] கல்வி
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia