புந்தேல்கண்ட் முகமை
புந்தேல்கண்ட் முகமை (Bundelkhand Agency) பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களுக்கு கீழிருந்த சுதேச சமஸ்தானங்களை காண்காணிக்கவும், ஆண்டுதோறும் திறை வசூலிக்கவும் நிறுவப்பட்ட முகமைகளில் ஒன்றாகும். புந்தேல்கண்ட் முகமையின் பிரித்தானிய அரசியல் முகவர், புந்தேல்கண்ட் பகுதியில் இருந்த சுதேச சமஸ்தானங்களை 1811-ஆம் ஆண்டு முதல் 15 ஆகஸ்டு 1947 வரை நிர்வகித்தார். [1] 1901-ஆம் ஆண்டில் புந்தேல்கண்ட் முகமை 25,510 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 13,08,326 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. வரலாறுபேஷ்வாகளின் தலைமையிலான மராத்தியப் பேரரசு 18-ஆம் நூற்றாண்டில் புந்தேல்கண்ட் பகுதியில் உள்ள சிறிய இராச்சியங்களை வென்று, தங்களுக்கு கீழ்படிந்த சிற்றரசுகளாக வைத்துக்கொண்டனர்.மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் புந்தேல்கண்ட் பகுதியின் ஆட்சியாளர்கள், 1818-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்று, ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானங்களாக ஆட்சி செய்தனர். புந்தேல்கண்ட் ஐக்கிய மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. புந்தேல்கண்ட் பகுதி சுதேச மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். சுதேச சமஸ்தானங்கள்புந்தேல்கண்ட் முகமையின் கிழக்கில் பகேல்கண்ட், வடக்கில் ஐக்கிய மாகாணம் இருந்தது.
குண்டு மரியாதையில்லா சுதேச சமஸ்தானங்கள்
ஜாகீர் அல்லது ஜமீன்தார்கள்
அவகாசியிலிக் கொள்கை படி பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்ட முன்னாள் இந்திய மன்னராட்சிகள்பிரித்தானிய தலைமை ஆளுநர் டல்ஹவுசி பிரபு கொண்டு வந்த அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசுரிமை அற்ற இராச்சியங்களை வலுக்கட்டாயமாக பிரித்தானிய இந்தியாவுடன் இணக்கப்பட்டது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia