தூத்துக்குடி வானூர்தி நிலையம்
தூத்துக்குடி வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: TCR, ஐசிஏஓ: VOTK) தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி நகரிலிருந்து 16.9 km (10.5 mi) தொலைவில் வாகைகுளத்தில் அமைந்துள்ள உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 26 டிசம்பர் 2014, அன்று தூத்துக்குடி வானூர்தி நிலையத்துக்கு 9001:2008 தரம் சான்றிதழ் வழங்கப்பட்டது. கட்டமைப்பு![]() தூத்துக்குடி வானூர்தி நிலையத்தில் ஒரு நிலக்கீல் ஓடுபாதை [ஆங்:asphalt runway] உள்ளது, இது 10/28, 1349 மீட்டர் நீளம் மற்றும் 45 மீட்டர் அகலம் கொண்டது. டாக்ஸிவே 15 மீட்டர் அகலமும் 225 மீட்டர் நீளமும் கொண்டது. வானூர்தி நிலையத்தில் இரண்டு வானூர்தி நிறுத்துமிடங்கள் உள்ளன. ஏப்ரனின் கிழக்கு பகுதியில் நிறுத்தம் எண் 1 மற்றும் மேற்கு பகுதியில் நிறுத்தம் எண் 2ம் உள்ளன. ஏடிஆர் 72 அல்லது அதற்கும் குறைவான ஏசிஎஃப்டி வகை வானூர்திகள் 'நிறுத்தம் எண் 1லும்' மற்றும் பாம்பார்டியர் க்யூ 400 க்கு குறைந்த எண் அல்லது குறைந்த வகை ஏசிஎஃப்டி வகை வானூர்திகள் 'நிறுத்தம் எண் 2லும்' நிறுத்தப்படுகின்றன. அதன் முனைய கட்டிடமானது அதிகபட்ச நெருக்கடி நேரங்களில் உச்சபட்சமாக 120 பயணிகளை கையாள முடியும். தூத்துக்குடி வானூர்தி நிலையத்தில் ஊடுருவல் உதவிகளில் என்டிபி 'டியூ', பிஏபிஐ விளக்குகள் மற்றும் ஏரோட்ரோம் பெக்கான் ஆகியவை அடங்கும். இது தற்போதுள்ள வி.எஃப்.ஆரிலிருந்து ஐ.எஃப்.ஆருக்கு உயர் வகை உரிமத்தை டி.ஜி.சி.ஏ 30.06.2020 அன்று வழங்கியுள்ளது. தூத்துக்குடி வானூர்தி நிலையம் அனைத்து வானிலை - பகல் மற்றும் இரவு நடவடிக்கைகளுக்கு 5 கி.மீ க்கும் குறைவான பார்வைக்கு திறன் கொண்டது. வானூர்தி போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் ஏப்ரனின் வடக்கே அமைந்துள்ளது மற்றும் ஏரோட்ரோம் கட்டுப்பாடு (ஏடிசி), மேற்பரப்பு இயக்கக் கட்டுப்பாடு (எஸ்எம்சி) மற்றும் அணுகுமுறைக் கட்டுப்பாடு (ஏபிபி) அலகுகளைக் கொண்டுள்ளது. வானூர்தி போக்குவரத்து சேவைகள் பிரிவு வானிலை தகவல்களுடன் வழங்கப்படுகிறது. விரிவாக்கமும் மேம்பாடும்வானூர்தி நிலையத்தை பல்வேறு கட்டங்களாக மேம்படுத்துவதற்கான முதன்மை திட்டம் இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்டது. விரிவாக்கத்திற்காக தமிழக அரசு 2018. டிசம்பர் 31 அன்று 600.97 ஏக்கர் நிலத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளது. கூடுதலாக 110 ஏக்கர் நிலம் இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூலை 25, 2020 அன்று தொடங்கப்பட்ட 96.77 கோடி விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக பின்வரும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன
29 ஜூன் 2020 அன்று, வானூர்தி நிலையத்தில் இரவு தரையிறங்கும் வசதிகள் நிறுவப்பட்டுள்ளன, அதன் முதல் நடவடிக்கையை 2020 ஜூலை 3 ஆம் தேதி இண்டிகோ வான்வழி நிறுவனங்கள் வழியாக சென்னைக்கு இரவு 7 மணிக்கு தொடங்கியது. செப்டம்பர் 2020 இல், இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம், ஓடுபாதையை விரிவுபடுத்துதல், புதிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ATC) கோபுரத்தை நிர்மாணித்தல் மற்றும் புதிய முனையக் கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட ஒரு திட்டத்தை மொத்தம் 381 கோடி செலவில் தொடங்குவதாகக் கூறியது. இது 2024 டிசம்பரில் கட்டிமுடிக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கும். புதிய முனையக் கட்டிடம் 17,341 சதுர மீட்டர் பரப்பளவில், 4 நுழைவு வாயில்களுடன், 21 பயணஏற்பு கல்லா(ஆங்: Check-in counter), 7 பயணப்பெட்டி நுணுகிநோக்கி(ஆங்: Luggage scanner), 3 வானூர்தி பாலம்(ஆங்: Aero bridge), 644 SHA இருக்கை வசதி மற்றும் பரபரப்பான நேரங்களில் 1440 பயணிகளைக் கையாள கூடிய வகையில் இருக்கும். ஏர்பஸ் ஏ320 வகை விமானங்களைக் கையாள்வதற்கான ஐந்து விமான நிறுத்துமிடங்களும் மற்றும் தொழில்நுட்பத் தொகுதி, தீயணைப்பு நிலையம், தனிமைப்படுத்தல் ஒதுக்கிடம்(ஆங்: Isolation bay), விமான தங்கிடத்தின் கடும்தளப் பரப்பு (ஆங்: Apron) ஆகியன இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.[2][3] இந்த ஓடுபாதை 3,115 மீ நீளமும் 45 மீ அகலமும் கொண்டதாக (தற்போதைய 1,350 மீ மற்றும் 30 மீட்டரிலிருந்து) நீட்டிக்கப்படும்; பின்னர் இந்த ஓடுபாதை சென்னைக்கு (3,611 மீ) அடுத்தபடியாக மாநிலத்தில் இரண்டாவது மிக நீளமானதாக இருக்கும்.[4] விமானச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்
சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia