மூன்றாம் கிளியோபாட்ரா
மூன்றாம் கிளியோபாட்ரா (Cleopatra III கிமு 160/155 – 101) பண்டைய பிற்கால எகிப்திய அரசிகளில் ஒருவர்.[2] எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தைச் சேர்ந்த பெண் அரசி ஆவார். இவர் முதலில் தனது தாய் இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் தனது கணவன் எட்டாம் தாலமியுடன் சேர்ந்து (கிமு 142- 131) வரையிலும் பின்னர் மீண்டும் (கிமு 127 - 116) காலகட்டத்திலும் இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டார். பின்னர் மூன்றாம் கிளியோபாட்ரா தனது மகன்களான ஒன்பதாம் தாலமி மற்றும் பத்தாம் தாலமியுடன் சேர்ந்து (கிமு 116 - 101) காலகட்டத்தில் எகிப்தின் இணை ஆட்சியாளராக ஆட்சி செய்தார். கிமு 107-இல் மூன்றாம் கிளியோபாட்ரா, ஒன்பதாம் தாலமியை அலெக்சாந்திரியா நகரத்திலிருந்து துரத்தி விட்டு, தனது மகன் பத்தாம் தாலமியை இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆண்டார். ஆறு ஆண்டுகள் கழித்து கிமு 101-இல் பத்தாம் தாலமி, மூன்றாம் கிளியோபாட்ராவைக் கொலை செய்து விட்டு, பத்தாம் தாலமியின் மனைவியும், மூன்றாம் கிளியோபாட்ராவின் பேத்தியுமான மூன்றாம் பெரெனிசை இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆட்சி செய்தார். இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia