இரண்டாம் நெக்தனெபோ
![]() ![]() ![]() ![]()
இரண்டாம் நெக்தனெபோ (Nectanebo II) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 30-ஆம் வம்சத்தின் இறுதி பார்வோனும், இறுதி எகிப்திய இன பார்வோனும் ஆவார். இவர் எகிப்தை கிமு 360 முதல் கிமு 342 முடிய 22 ஆன்டுகள் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்குப் பின்னர் பண்டைய எகிப்தை கைப்பற்றிய எகிப்தியர் அல்லாத பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர்களும், கிரேக்க தலாமி வம்சத்தவர்களும், உரோமைப் பேரரசர்களும் கிமு 303 முதல் கிபி 641 முடிய ஆண்டனர். இரண்டாம் நெக்தனெபோவின் ஆட்சிக் காலத்தில் போற்றப்பட்ட சிறப்பான எகிப்தியக் கலைகள், பின்னர் எகிப்தை கிரேக்க தாலமி வம்சத்தினர்களுக்கு விட்டுசசெல்லப்பட்டது. [6] பெலுசியம் சண்டைகிமு 343-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ் படையினர்களுக்கும், பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 30-ஆம் வம்ச இறுதிப் பார்வோன் இரண்டாம் நெக்தனெபோ படையினர்களுக்கும் நைல் வடிநிலத்தின் கிழக்கில் அமைந்த பெலுசியம் எனுமிடத்தில் நடைபெற்ற போரில், [7][8] எகிப்தியர்கள் தோல்வியுற்றனர். இப்போரின் முடிவில் எகிப்தில் எகிப்தியர்களின் பிந்தைய கால இராச்சியத்தின் ஆட்சி முடிவுற்றது. இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia