செத்தியாவங்சா எல்ஆர்டி நிலையம்
செத்தியாவங்சா எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Setiawangsa LRT Station; மலாய்: Stesen LRT Setiawangsa; சீனம்: 斯迪亚旺沙) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் பகுதியில் கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது.[2] இந்த நிலையம் சூன் 1, 1999 அன்று திறக்கப்பட்டது; மற்றும் அருகில் உள்ள செத்தியா வங்சா குடியிருப்பின் பெயரில் இந்த நிலையத்திற்கும் பெயரிடப்பட்டது. இந்த நிலையம் செத்தியா வங்சா மற்றும் அம்பாங் புறநகர்ப் பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது.[3] பொதுமஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் தொடங்கி புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி நிலையம் வரையிலான 12 இலகு விரைவுப் போக்குவரத்து நிலையங்களை உள்ளடக்கிய இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது. இந்த நிலையம் புதிய எம்ஆர்டி நிலையத்திற்கான நிர்மாணத்தில் உள்ளது; மற்றும் சுற்று வழித்தடத்தின் எதிர்காலப் பரிமாற்று நிலையமாகச் சேவை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. 2028-ஆம் ஆண்டில் புதிய எம்ஆர்டி நிலையம் திறக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. அமைவுஇந்த நிலையம் மூன்று அடுக்குகளைக் கொண்ட நிலையமாகும். தொடருந்துகள் வழியாக ஏறி இறங்கும் இடம் தரையிலிருந்து மேலே உள்ளது. இந்த நிலையத்தில் கிளானா ஜெயா வழித்தடத்தின் சேவைகளுக்கான மையத் தளமும் உள்ளது.[4] ஓர் உயரமான நிலைய அமைப்பைக் கொண்ட செத்தியாவங்சா நிலையம் மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்டுள்ளது; அதாவது மூன்று அடுக்குத் தளங்களைக் கொண்டது. கீழ் அடுக்கில், சாலை மட்டத்தில் பயணிகளின் அணுகல் தளம் உள்ளது; மற்றும் இரண்டு உயர் அடுக்கு நிலைகளில் கடப்புச் சீட்டு, சிற்றுண்ண்டிச் சாலைகள் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைஅனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமை தூக்கிகள் உள்ளன. அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது. நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது. பேருந்து சேவைகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia