கன்னியாகுமரி தொடருந்து நிலையம்
கன்னியாகுமரி தொடருந்து நிலையம் (Kanyakumari railway station, நிலையக் குறியீடு:CAPE) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ள தொடருந்து நிலையமாகும். நிர்வாகம்இது தென்னக இரயில்வேயின், திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1] கன்னியாகுமரி தொடருந்து நிலையம் ஆனது, கன்னியாகுமரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து 1 கிலோமீட்டர் (0.62 மைல்) தொலைவில் உள்ளது. திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, கன்னியாகுமரி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 49.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10][11] சேவைகள்பல விரைவு இரயில்கள் கன்னியாகுமரியை, இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன. இந்திய இரயில்வேயால் இயக்கப்படும் மிக நீண்ட தூர பயண இரயில்களான திப்ருகார் - கன்னியாகுமரி விவேக் விரைவுத் தொடருந்து 4,283 கிலோமீட்டர் (2,661 மைல்) மற்றும் ஹிம்ஸாகர் விரைவுத் தொடருந்து 3,789 கிலோமீட்டர் (2,354 மைல்) ஆகிய இரண்டு வண்டியும்,இங்கிருந்து புறப்படுகின்றன. இங்கிருந்து சென்னை, பெங்களூர் மற்றும் மும்பைக்கு தினசரி இரயில்களையும், இராமேஸ்வரம், புது தில்லி, ஹவுரா, ஜம்மு, திப்ருகார், திருவனந்தபுரம் மற்றும் பிற நகரங்களுக்கான நேரடி இரயில்களும் இயக்கப்படுகிறது. படங்கள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia