பாடாங் செராய் மக்களவைத் தொகுதி
பாடாங் செராய் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Padang Serai; ஆங்கிலம்: Padang Serai Federal Constituency; சீனம்: 巴东士乃联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தில் (Kulim District) உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P017) ஆகும். பாடாங் செராய் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பாலிங் தொகுதி 43 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[1] பொதுநாடாளுமன்றத்தில் தமிழர்கள்பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியை 2008-ஆம் ஆண்டில் இருந்து, 13 ஆண்டுகளாகத் தமிழர்கள் தக்க வைத்துக் கொண்டனர். இந்தத் தொகுதியில் மலாய்க்காரர்களும், சீனர்களும் அதிகமான வாக்காளர்களாக இருந்தாலும் மூன்று முறை தமிழர்களைத் தேர்ந்து எடுத்து மலேசிய நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்கள். (விவரங்கள் கீழே உள்ளன) இருப்பினும் கடந்த 15-ஆவது மலேசியப் பொதுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது வேட்பாளர் கருப்பையா முத்துசாமி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.[2] அவருக்குப் பதிலாக முகமது சோபி ரசாக் (Mohamad Sofee Razak) என்பவர் வேட்பாளராக நிறுத்தப் பட்டார். பாடாங் செராய் நகரம்பாடாங் செராய் நகரம் (Padang Serai) மலேசியா, கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். பாடாங் செராய் நகரம் கோலா கெட்டில்; லூனாஸ் நகரங்களுக்கு இடையில் அமைந்து உள்ளது. இந்த நகரைச் சுற்றிலும் பல செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. அந்த வகையில் அதிகமான தமிழர்களும் பாடாங் செராய் சுற்றுப் பகுதிகளில் வாழ்கிறார்கள். 2018-ஆம் ஆண்டு வாக்காளர்கள் பதிவின்படி மலாய்க்காரர்கள் 59.05 விழுக்காடு; இந்தியர்கள் 20.74 விழுக்காடு; சீனர்கள் 19.8 விழுக்காடு.[3] சீனர்களைக் காட்டிலும் தமிழர்கள் சற்று அதிகமாக இருந்தனர். பாடாங் செராய் தமிழர்கள்1890-ஆம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாடாங் செராய்; கூலிம்; லூனாஸ் பகுதிகளில் இருந்த காபி, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழகத்தில் இருந்து அழைத்து வரப் பட்டார்கள். அவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று அழைத்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில் பாடாங் செராய் நகரத்தைச் சுற்றிலும் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. 1990-ஆம் ஆண்டுகளில் பாடாங் செராய்; கூலிம் வட்டாரங்களில் தொழில்துறை மேம்பாடுகள் காணப்பட்டன. அவற்றின் காரணமாக பல ரப்பர் தோட்டங்கள் மூடப்பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்களில் பெரும்பாலோர் பாடாங் செராய் புறநகர்ப் பகுதிகளில் குடியேறினார்கள். மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் இடங்களில் பாடாங் செராய் நகரமும் ஒன்றாகும். பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி
பாடாங் செராய் தேர்தல் முடிவுகள்
பாடாங் செராய் வேட்பாளர் விவரங்கள்
பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியின் தமிழர்கள்மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் 2008-ஆம் ஆண்டில் இருந்து 2021-ஆம் ஆண்டு வரையில் பாடாங் செராய் தொகுதியைப் பிரதிநிதித்த தமிழர்கள்:
மேற்கோள்கள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia