திருவேங்கடமுடையான் திருக்கோவில், திருமலை
திருவேங்கடமுடையான் திருக்கோவில், திருமலை (Thiruvēṅkaṭamudaiyān Temple) என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான தலம் ஆகும். இது ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் திருப்பதி மாவட்டம் மற்றும் திருமலை பகுதியில், பழங்கால வேங்கடம் அல்லது வேங்கடமலை என அறியப்பட்ட ஏழு மலைகளின் (ஏழுமலை) ஒருங்கிணைந்த பகுதியில் அமைந்துள்ளது. இத்தலத்தின் முதன்மை தெய்வம் திருவேங்கடமுடையான் என்றும், ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் வணங்கப்படும் தாயார் அழகிய பத்மமாமணியம்மை அல்லது பத்மாவதி நாச்சியார் ஆவார். இந்தப் பகுதி சேஷமலை, கருமுகில் மலை அல்லது கருடமலை, நீலமலைன, அஞ்சனமலை, எருமைமலை அல்லது விருசபமலை, மாயோன்மலை அல்லது நாராயணமலை, வேங்கடமலை என ஏழு மலைகளால் சூழப்பட்டிருப்பதனால், இத்தலம் "ஏழுமலை" என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்குப் பிற பெயர்களாக, சமஸ்கிருதத்தில் "வெங்கடேஸ்வர சுவாமி கோயில்" (Venkateswara Swamy Temple) அல்லது "திருப்பதி பாலாஜி கோயில்" (Thiruppathi Balaji Temple) எனவும் குறிப்பிடப்படுகின்றன.[1][2][3] வேங்கடமலை சுமார் 3,200 அடி உயரமுடையதும், 10.33 சதுர மைல்கள் பரப்பளவுடையதும் ஆகும். இக்கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[4] இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் நேர்முக நோன்புகளின் ஒரு பகுதியாக திருமுடி காணிக்கை செய்வதும், கோயிலின் வருமானத்தில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.[5] இக்கோயில் இந்தியாவிலேயே அதிக வருமானம் தரும் கோயில்களில் ஒன்றாக திகழ்கிறது. சொல்லிலக்கணம்திருப்பதி - திரு + பதி - பதியென்பது கடவுளைக் குறிக்கும் சொல்லாகும். தலவரலாறுபிருகு போன்ற முனிவர்கள் யாகம் செய்தார்கள். அந்த யாகத்தின் பலனை சாந்தமான மூர்த்தியொருவருக்கே அளிக்க வேண்டுமென எண்ணி, மும்மூர்த்திகளில் திருமாலின் இருப்பிடத்திற்கு சென்றார். பிருகு முனிவரின் வருகையை அறியாது உறங்கிக் கொண்டிருந்த திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். அதனால் திருமாலின் இதயத்தில் இருந்த திருமகள் கோபம் கொண்டு அவரிடமிருந்து சென்றார். திருமால் பூமியில் திருமகளைத் தேடி வேங்கட மலையில் ஓரிடத்தில் தவமிருந்தார். அவரைச் சுற்றி புற்று உருவானது. அப்புற்றில் தவமிருந்த திருமாலின் மீது புற்றினை உடைக்க வீசப்பட்ட கோடாறியால் திருமாலின் தலையிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. திருமால் தவம் களைந்து வகுளாதேவி ஆசிரமம் சென்றார். சீனிவாசன் என பெயரிட்டு அங்கு வகுளாதேவி அன்புடன் உபசரித்தார். அவர்களின் ஆசிரமம் அருகே இருக்கும் சந்திரிகிரி நாட்டினை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவருடைய மகளான பத்மாவதிக்கு சீனிவாசனை மணம் செய்விக்க வகுளாதேவி சென்றார். இருவருடைய திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தேற சீனிவாசன், குபேரனிடம் கடன் வாங்கினார்.[6] வரலாறுதிருப்பதி ஏழுமலையான் கோயில் முதலில் தமிழகத்தின் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன் என்பவனால் கட்டப்பட்டது. பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் இருந்தே உள்ளதாக பல்லவ, சோழ, பாண்டிய, சாளுக்கிய மற்றும் விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.[7][8] திருப்பதி திருமலை தேவஸ்தானம்இக்கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்கிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இக்கோயிலின் நிர்வாகம் ஹதிராம்ஜி மடத்தினை சேர்ந்த சேவா தாஸ்ஜியிடம் இருந்தது. 1932ல் மதராஸ் அரசாங்கத்தில் திருமலை இருந்தது. அப்போது 1933ல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்டது.[9] கோயில் அமைப்புஇக்கோயில் மூன்று பிரகாரங்களையும், ராஜ கோபுரத்தினையும் கொண்டது. இக்கோயிலில் உள்ள ரங்க மண்டபம் அன்னியர்களின் தாக்குதலில் இருந்து ரங்கநாதர் கோயிலை காக்க ரங்க நாதரை திருப்பதியில் கொண்டுவந்ததாக கூறப்படும் தொன்மத்தோடு தொடர்புடையது. திருப்பதி கோயிலின் முதல் பிரகாரம் சம்பங்கி பிரதட்சணம் எனப்படுகிறது. இதில் கிருஷ்ணதேவராயர் மண்டபம், பிரதிம மண்டபம், ரங்கராயர் மண்டபம், திருமலைராயர் மண்டபம் ,துவஸ்தம்ப மண்டபம், நரசிம்மர் மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன. விமான பிரதட்சண பிரகாரம் என்பது இரண்டாவது பிரகாரமாகும். இதில் கல்யாண மண்டபம், விமான வேங்கடேசுவரர், ஸ்னபன மண்டபம், சயன மண்டபம், ஆனந்த நிலையம் மற்றும் கர்ப்பகிரஹம் ஆகியவை உள்ளன. மூன்றாவது பிரகாரம் வைகுண்ட பிரகாரம் ஆகும். இது ஆண்டுக்கொரு முறை வைகுண்ட ஏகாதேசியின் பொழுது திறக்கப்படுகிறது.[10] மூலவர்மூலவரான வேங்கடாசலபதி நின்ற கோலத்தில் இருப்பவர். இவரை ஏழுமலையான், திருவேங்கடமுடையான், வேங்கடநாதன், வெங்கடாஜலபதி, வேங்கடேசன், வேங்கடேசுவரன், கோவிந்தன், சீனிவாசன், பாலாஜி என பல பெயர்களில் அழைக்கின்றனர். கருவறை மண்டபத்தில் இருக்கின்ற ஒரு படி குலசேகர ஆழ்வார் படியென அழைக்கப்படுகிறது. தாயார்பிரகாரத் தெய்வங்கள்மூன்றாவது பிரகாரத்தில் விஷ்வக்சேனர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் நான்கு கரங்களுடன், சங்கு சக்கரம் கொண்டு திருமாலினைப் போன்று காணப்படுகிறார். இவர் சிவாலயங்களில் இருக்கும் சண்டீசுவரரைப் போன்றவர். திருமாலுக்கு சமர்ப்பிக்கப்படும் மாலைகள், பிரசாதங்கள் விஷ்வக்சேனருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. [11] மண்டபங்கள்
நடைபாதைதிருப்பதி வெங்கடாசலபதி கோயில் நடைபாதை சிறப்பானதாகும். இப்பாதை கீழ்திருப்பதியிருந்து தொடங்குகிறது. இப்பாதையின் இருபுறமும் ஆழ்வார்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அலிபிரி பகுதியில் கருடாழ்வாரும், கபில தீர்ததமும் அமைந்துள்ளன. இதனைக் கடந்து செல்கையில் ஆஞ்சநேயர் சிலையும், முழங்கால் முடிச்சு, காளிகோபுரம் போன்ற இடங்களும் காணப்படுகின்றன. மற்றும் வாரிமெட்டு என்ற பகுதியிலிருந்தும் மலைகோவிலுக்கு வரலாம். இதுவே ஆதியில் பிரதான வழியாக இருந்துள்ளது. நடைபாதையில் வருகின்ற பக்தர்களுக்கு தர்ம தரிசனமும், தங்குமிடமும் இலவசமாக திருப்பதி தேவஸ்தானம் அளிக்கிறது. சேவைகள்
விழாக்கள்
மங்களாசாசனம்ஆழ்வார்களில் ஒருவரான குலசேகர ஆழ்வாரால் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. படக்காட்சியகம்
நூல்கள்கல்வெட்டுகள்இக்கோவிலில் 1180 கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், விஜயநகர மன்னர்கள்,கிருஷ்ண தேவராயர் காலத்தியவைகளாக உள்ளன. இக்கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகளாகும். தெலுங்கு , கன்னட மொழிகளில் பல்வேறு காலகட்ட கல்வெட்டுகள் உள்ளன.[12] இவற்றையும் காண்கஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia