தேசிய நெடுஞ்சாலை 12 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 12 (National Highway 12 (India)), (முன்பு NH 34), என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும், இது முற்றிலும் மேற்கு வங்காளத்தில் செல்கிறது. இது டல்கோலாவில் தெ. நெ. 27 உடன் இதன் சந்திப்பில் பக்காலியில் முடிவடைகிறது.[1] வழித்தடம்தேசிய நெடுஞ்சாலை 12 வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தல்கோலாவில் தே. நெ. 27-ல் இதன் சந்திப்பிலிருந்து உருவாகிறது மற்றும் கரண்டிகி, மகாராஜாஹத் ராய்கஞ்ச், கசோல், மால்டா வழியாக செல்கிறது. பராக்கா பாரேஜ், உமர்பூர் முர்ஷிதாபாத், பஹரம்பூர், பெல்டங்கா, பெதுவாதாஹரி, கிருஷ்ணாநகர், பெல்காட் எக்ஸ்வே, பெல்காட் எக்ஸ்வே, தன்குனி, சந்த்ராகாச்சி, பெஹாலா, அம்தாலா, டயமண்ட் ஹார்பர், காக்ட்வீப். மேம்பாடு2020ஆம் ஆண்டில், ஜகுலியாவிலிருந்து நாடியாவில் உள்ள கிருஷ்ணாநகர் வரையிலான 66 கி.மீ. நீளம் விரிவுபடுத்தப்பட்டது.[2] 2021 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், மத்திய அரசு நான்கு மாநிலங்களுக்கு நெடுஞ்சாலைத் திட்டங்களை ஒதுக்கியது. இதில் 675 கி. மீ. நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையின் வளர்ச்சிக்காக ₹25,000 கோடி (US$3.3 பில்லியன்) ஒதுக்கப்பட்டது.[3] தே. நெ. 12-ல் உள்ள நகரங்கள்
சுங்கச்சாவடிகள்தேசிய நெடுஞ்சாலை 12 முழுவதும் மேற்கு வங்காளத்திற்குள் அமைந்துள்ளது. பக்காலி முதல் தல்கோலா வரையிலான சுங்கச்சாவடிகளின் (மாவட்ட வாரியாக) பட்டியல் கீழே உள்ளது.[4] தெற்கு 24 பரகனாக்கள்
நதியா
முர்ஷிதாபாத்
மால்டா
வடக்கு 24 பரகானாஸ் மற்றும் வடக்கு தினாஜ்பூர் மாவட்டங்களில் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகள் எதுவும் இல்லை. ஆசிய நெடுஞ்சாலை வலைப்பின்னல்பராசத்தில் இருந்து பெல்கோரியா வரையிலான நெடுஞ்சாலை ஆசிய நெடுஞ்சாலை 1 வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இது ஜப்பானின் தோக்கியோவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லில் முடிவடைகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia