தேசிய நெடுஞ்சாலை 183அ (National Highway 183A (India)) என்பது தே. நெ. 183அ என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது கொல்லத்தில் உள்ள சவரா டைட்டானியம் சந்திப்பிலிருந்து அடூர்,பத்தனம்திட்டா நகரங்கள் வழியாக வண்டிபெரியாறு வரை செல்கிறது.[2] இது கொல்லம் மாவட்டம் வழியாகச் செல்லும் 4வது தேசிய நெடுஞ்சாலையாகும்.
தேசிய நெடுஞ்சாலை
தேசிய நெடுஞ்சாலை 183அ, 2014 மார்ச் 4 அன்று தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது. இது அடூரிலிருந்து பிளப்பள்ளி வரை இரண்டு வழி போக்குவரத்து நெடுஞ்சாலையாகத் தேசிய நெடுஞ்சாலை தரத்துடன் உள்ளது. பிளப்பள்ளிக்கு முந்தைய பகுதி 4 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டது. இப்பகுதி காடுகள், வனவிலங்குகள் வாழும் பகுதிகள் வழியாகச் செல்கிறது. சாலையின் சீரமைப்பு குறித்து வனத்துறை கவலை எழுப்பியது. சாலை மேம்படுத்தப்பட்டவுடன், வண்டிப்பெரியாறிலிருந்து சபரிமலைக்கு ஒரு புதிய இணைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.தற்போது அங்கமூழி வன சோதனைச் சாவடிக்கும் வள்ளக்கடவு வன சோதனைச் சாவடிக்கும் இடையிலான பாதையில் நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை ஒரு நாளைக்கு 30 தனியார் வாகனங்களை மட்டுமே அனுமதிக்கிறது. கொச்சண்டி சோதனைச் சாவடியில் நுழையும் வாகனங்கள் மாலை 6 மணிக்கு முன் வள்ளக்கடவு சோதனைச் சாவடி வழியாக மட்டுமே வெளியேற வேண்டும்.[3][4]