தேசிய நெடுஞ்சாலை 320ஈ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 320ஈ, (National Highway 320D (India)) பொதுவாக தே. நெ. 320ஈ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 20-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 320ஈ இந்தியாவின் சார்க்கண்டு, ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2] வழித்தடம்தேசிய நெடுஞ்சாலை 320ஈ, சார்க்கண்டு, ஒடிசா மாநிலங்களில் உள்ள சக்ரதார்பூர், சோனுவா, கோயல்கேரா, மனோகர்பூர், ஜரைகேலா, ராவுர்கேலா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2] சந்திப்புகள்
எதிர்காலத் திட்டம்சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலை 320ஈ மறுசீரமைப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், இத்திட்டத்திற்காக ரூபாய் 1 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் டாட்டா நகரை சக்ரதர்பூர், சோனுவா, கோல்கேரா, கைடா, பார்போஷ், மனோகர்பூர், பிஸ்ரா, பொண்டமுண்டா வழியாக ராவுர்கேலாவுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக, சினி, ராஜ்கர்சவான், பாராபம்போ வழியாக தேசிய நெடுஞ்சாலை 43-ஐ தேசிய நெடுஞ்சாலை 20-உடன் இணைக்கும் வகையில் போலாதியிலிருந்து சக்ரதார்பூர் வரை சாலை அமைக்கப்படும். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சினைகள் இந்த திட்டத்திற்கு இடையூறாக உள்ளன. மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia