தேசிய நெடுஞ்சாலை 29 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 29 (தே. நெ. 29)(National Highway 29 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த நெடுஞ்சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலை 36, 39 மற்றும் 150இன் ஒரு பகுதியாக இருந்தது. மார்ச் 5, 2010 அன்று வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை எண்களைச் சீரமைத்ததால், இது தேசிய நெடுஞ்சாலை 29 என மறுபெயரிடப்பட்டது.[1] தேசிய நெடுஞ்சாலை 29 இந்திய மாநிலங்களான அசாம், நாகாலாந்து வழியாக மணிப்பூர் எல்லையில் முடிவடைகிறது.[2] இந்தத் தேசிய நெடுஞ்சாலை 338.5 கி.மீ. நீளம் கொண்டது.[3] வழித்தடம்தேசிய நெடுஞ்சாலை 29 அசாமில் உள்ள தபகா (சுதர்கான்) மஞ்சாவை நாகாலாந்தில் உள்ள திமாபூர், சுமுகெடிமா, கோகிமா, சிசாமியுடன் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஜெசாமியில் முடிவடைகிறது.[3] அசாம்தபகா-டோக்மோகா-பகுலியா-மஞ்ஜா-அமலாகி நாகாலாந்துதிமாபூர்-சுமௌகெடிமா-கோஹிமா-சிசாமி மணிப்பூர்ஜெசாமி சந்திப்புகள்![]()
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia