தேசிய நெடுஞ்சாலை 79 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 79 (NH 79) என்பது இந்தியாவின் முழுக்க முழுக்க தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இந்த நெடுஞ்சாலை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை மற்றும் சேலத்திற்கு இடையே மொத்தம் 134 km (83 mi) தூரமுடையதாக உள்ளது.[2] இது சேலத்தில் தே. நெ. 44 மற்றும் தே. நெ. 544ஐ இணைக்கிறது. தே. நெ. 79 உளுந்தூர்பேட்டையில் தே. நெ. 68 மற்றும் மா. நெ. 69 மற்றும் கள்ளக்குறிச்சியில் மா. நெ. 6ஐயும் இணைக்கிறது. இது ரிலையன்ஸ் உட்கட்டமைப்பு மற்றும் மைடாஸ் நிறுவனத்தால் கட்டமைத்து நிர்வகித்து பரிமாறுதல் அடிப்படையில் இரண்டு கட்டங்களாக இரட்டைப் பாதை சாலையாக மேம்படுத்தப்பட்டது. போக்குவரத்துதே. நெ. 79 கோயம்புத்தூர் மற்றும் கொச்சி ஆகிய இரு முக்கிய நகரங்களிலிருந்து பயணிக்கும் வாகனங்களுக்கான முக்கியமான இணைப்புச் சாலையாகும். தே. நெ. 79 சேலத்தை நேரடியாகச் சென்னையுடன் இணைக்கிறது. மேலும் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் இந்தப் பகுதிகளைச் சுற்றியுள்ள நகரங்களுக்கும் சேவையினை வழங்குகிறது. வழித்தடம்உளுந்தூர்பேட்டை - எலவனாசூர் கோட்டை - தியாகதுர்கம் - கள்ளக்குறிச்சி - சின்னசேலம், தலைவாசல் - காட்டுக்கோட்டை - ஆத்தூர் - பெத்தநாயக்கன்பாளையம் - வாழப்பாடி - சேலம்.[3] சந்திப்புகள்
படங்கள்
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia