தேசிய நெடுஞ்சாலை 717 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 717 (தே. நெ. 717)(National Highway 717 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முற்றிலும் மேற்கு வங்காள மாநிலத்தில் செல்கிறது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 17-இன் இரண்டாம் நிலை பாதையாகும். 2010ஆம் ஆண்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு, சல்சா, மைனாகுரி இடையேயான பகுதி பழைய தேசிய நெடுஞ்சாலை 31-இன் ஒரு பகுதியாக இருந்தது.[2] 27 திசம்பர் 2013 அன்று இந்திய அரசின் அறிவிப்பின் மூலம், தேசிய நெடுஞ்சாலை 717 என மைனகுரியிலிருந்து இந்தியா/வங்களதேச எல்லையின் எல்லைக் கடக்கும் சாங்ரபந்தா வரை நீட்டிக்கப்பட்டது.[3] இந்த வழித்தடத்தின் மைனகுரி முதல் சாங்ரபந்தா வரையிலான பகுதி ஆசிய நெடுஞ்சாலை 48-இன் ஒரு பகுதியாகும்.[4] வழித்தடம்![]() தே. நெ. 717 பராதிகி, மைனகுரி, சாங்ரபந்தாவின் வடக்கே சல்சாவினை இணைக்கிறது. இது இந்தோ/வங்களதேச எல்லையில் முடிவடைகிறது.[5] சந்திப்புகள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia