தேசிய நெடுஞ்சாலை 73 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 73 (தே. நெ. 73)(National Highway 73 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை இந்திய மாநிலமான கருநாடகாவில் செல்கிறது. இது கடல் துறைமுக நகரமான மங்களூரில் தொடங்கி துமகுருவில் முடிவடைகிறது.[1] தேசிய நெடுஞ்சாலை என்று பெயரிடப்பட்டாலும், மேற்குத் தொடர்ச்சி மலையின் சார்மாடி மலைப் பகுதியில் இந்த சாலை குறுகியது. மேலும் இச்சாலை நிலச்சரிவுகள், மரங்கள் விழும் அபாயத்திற்கு உட்பட்டது. இந்த நெடுஞ்சாலை முன்பு தேசிய நெடுஞ்சாலைகள் 48, 234 மற்றும் 206இன் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் மார்ச் 5, 2010 அன்று வர்த்தமானி அறிவிப்பால் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை எண்களைச் சீரமைத்ததைத் தொடர்ந்து இது தேசிய நெடுஞ்சாலை 73ஆக மாற்றப்பட்டது.[2] வழித்தடம்![]() தேசிய நெடுஞ்சாலை 73 (தே. நெ-73) மங்களூரு, பந்த்வால் பெள்தங்கடி, உஜிரே, சார்மாடி, கோட்டிகேஹரா, முடிகேர், பேலூர், ஹளேபீடு, ஜவகல், பனவாரா, அராசிகெரே, திப்தூர், கிப்பனவர, நிட்டூர், குப்பி மற்றும் கருநாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் வழியே நிடூரை இணைக்கிறது.[3] சந்திப்புகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia