தேசிய நெடுஞ்சாலை 312 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 312 (National Highway 312 (India)) பொதுவாக தே. நெ. 312 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில்[3] உள்ள தேசிய நெடுஞ்சாலை 12-ன் இரண்டாம் பாதையாகும்.[2][4] வழித்தடம்சாலை கீழ்க்கண்ட நகரங்களை இணைக்கிறது
ஜாங்கிபூர், ஓமர்பூர், லால்கோலா, பகவங்கோலா, முர்சிதாபாத், சுனாகாளி, இசுலாம்பூர், தோம்கல், ஜலங்கி
கரீம்பூர், நசீர்பூர், ஹரிபூர், பேட்டை, தேவ்நாத்பூர், தெகட்டா, சாப்ரா, கிருஷ்ணநகர், ஹன்ஷ்காலி, தத்தாபுலியா
பனேசுவர்பூர், கெலன்சா, பங்காவ்ன், பெரிகோபால்பூர் காட், இச்சாமதி, தர்னிபூர் காட், சுவரூப்நகர் மற்றும் பாசிர்ஹத் (கோஜாதாங்கா)[1][2] சந்திப்புகள்
மறுசீரமைப்பு2022ஆம் ஆண்டில், இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 318 கிமீ (198 மைல்) நெடுஞ்சாலையை 4 வழிச்சாலைகளாக மறுவடிவமைக்க 4,500 கோடி ரூபாய் (530 அமெரிக்க டாலர்) ஒதுக்கியது. இந்த நெடுஞ்சாலை 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[5] இருப்பினும், பல்வேறு இடங்களில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சினைகள் இந்தத் திட்டத்திற்குப் பல ஆண்டுகளாகத் தாமதத்தை ஏற்படுத்துகின்றன. பிப்ரவரி 2024-இல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குப் பதிலளித்த நெடுஞ்சாலை ஆணையத் தகவலின்படி இந்த நெடுஞ்சாலையின் விரிவான திட்ட அறிக்கை இன்னும் முடிக்கப்படவில்லை என்றும், திட்டத்தின் தொடக்கத்திற்கும் நிறைவிற்கும் எந்தக் குறிப்பு காலமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தது.[6] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia