தேசிய நெடுஞ்சாலை 19 (தே. நெ. 19)(National Highway 19 (India)) என்பது இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது முன்பு தில்லி-கொல்கத்தா சாலை என்று குறிப்பிடப்பட்டது. இது இந்தியாவின் பரபரப்பான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலைகளின் மறு எண்களின் பின், தில்லி-ஆக்ரா பாதை இப்போது தேசிய நெடுஞ்சாலை 44 ஆகவும், ஆக்ரா-கொல்கத்தா பாதை தேசிய நெடுஞ்சாலை 19ஆகவும் உள்ளது.[2][3] இது வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும் தலைநெடுஞ்சாலையின் பெரும்பகுதியாகும். இது சப்பானிலிருந்துதுருக்கி செல்லும் ஆசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் ஆ. நெ. 1-இன் ஒரு பகுதியாகும்.
2010ஆம் ஆண்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அனைத்துத் தேசிய நெடுஞ்சாலைகளும் மறுபெயரிடப்படுவதற்கு முன்பு இது தே. நெ. 2 என்று அழைக்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தால் தங்க நாற்கர சாலையின் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை 19 தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[5]
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தால் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியாக பாரா மற்றும் கான்பூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை 19-இன் சுமார் 35 km (22 mi) கி.மீ. (22 மைல்) நீளம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[5]
தேசிய நெடுஞ்சாலை 19 ஆக்ராவை கொல்கத்தாவுடன் இணைக்கிறது. இது இந்தியாவின் நான்கு மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், சார்க்கண்டு மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவற்றைக் கடந்து செல்கிறது.[2][4]
தேசிய நெடுஞ்சாலை 19 ஆக்ராவில் தொடங்கி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூர், அலகாபாத், வாரணாசி, மோகனியா, சசாராம், தெக்ரி ஆன் சோன், அவுரங்காபாத், டோபி (கயா), சார்க்கண்டு மாநிலத்தில் பர்கி (அசாரிபாக்), கோபிந்த்பூர் (கிரிடிஹ்பாத்), அசன்சோல், துர்காபூர் ஆகிய இடங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை-44 உடன் இதன் சந்திப்பில் தொடங்கி மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா அருகே தேசிய நெடுஞ்சாலை 16 உடன் முடிவடைகிறது.
சுங்கச்சாவடிகள்
ஆக்ராவிலிருந்து கொல்கத்தா வரையிலான சுங்கச்சாவடிகள் பின்வருமாறு: