கிளானா ஜெயா வழித்தடம்
கிளானா ஜெயா வழித்தடம் அல்லது கிளானா ஜெயா இலகு தொடருந்து வழித்தடம் (ஆங்கிலம்: LRT Kelana Jaya Line அல்லது Kelana Jaya Komuter Line; மலாய்: Laluan Kelana Jaya அல்லது LRT Laluan Kelana Jaya) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் இலகு விரைவு தொடருந்து வழித்தடம் (Light Rapid Transit Line) (LRT) ஆகும். இந்த வழித்தடம் மலேசியாவில் முதல் முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து அமைப்பைக் கொண்டதாகும்.[1] இந்த வழித்தடம் மலேசியாவின் கோலாலம்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமல்படுத்தப்பட்ட கிள்ளான் பள்ளத்தாக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பின் (Klang Valley Integrated Transit System) ஒரு பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 37 நிலையங்கள் உள்ளன. 46.4 கி.மீ. நீளமுள்ள பாதையில் பெரும்பாலும் நிலத்தடி மற்றும் உயரமான மேம்பால அடுக்குகளில் எல்ஆர்டி நிலையங்கள் இயங்குகின்றன. பொதுமுன்பு இந்த வழித்தடம் புத்ரா எல்ஆர்டி (PUTRA LRT) என அழைக்கப்பட்டது. இது ரேபிட் கேஎல் அமைப்பின் ஒரு பகுதியாக, பிரசரானா மலேசியாவின் துணை நிறுவனமான ரேபிட் ரெயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்திற்கு அதன் முன்னாள் முனையமான கிளானா ஜெயா நிலையத்தின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அதிகாரப்பூர்வமான போக்குவரத்து வரைபடங்களில் வழித்தடம் 5; வழித்தடத்தின் நிறம் சிவப்புக்கல் என பொறிக்கப்பட்டு உள்ளது. 15 பிப்ரவரி 1994-இல் கிளானா ஜெயா வழித்தடத்தின் கட்டுமானம் தொடங்கியது. அதே தொடக்கத்தில் இருந்து இறுதி வரையிலான முழுப் பயணத்திற்கும் மொத்தம் ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பிடிக்கும்; மற்றும் இந்தப் பயணம் 37 நிலையங்களை உள்ளடக்கியது.[1] கட்டுமானங்கள்அஜாமா கார்ப்பரேசன் (Hazama Corporation) மற்றும் உண்டாய் பொறியியல் கட்டுமான நிறுவனத்தால் (Hyundai Engineering & Construction) சுரங்கப்பாதைகள் உருவாக்கப்பட்டன. முதல் கட்டமாக செப்டம்பர் 1, 1998-இல் சுபாங் கிடங்ககம் மற்றும் பாசார் செனி நிலையத்திற்கு இடையே கட்டுமானங்கள் தொடங்கின.[2] இரண்டாம் கட்டமாக, சூன் 1, 1999-இல் பாசார் செனி எல்ஆர்டி நிலையத்தில் இருந்து முதல் புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி வரை (Terminal Putra), கட்டுமானங்கள் தொடங்கின.[3] புதிய நிலையங்கள்2002-ஆம் ஆண்டில், இந்த வழித்தடத்தில் 150 மில்லியன் பயணிகள், சராசரியாக ஒவ்வொரு நாளும் 250,000 பயணிகள் பயணித்தனர். தேசிய நிகழ்ச்சிகளின் போது ஒரு நாளைக்கு 350,000-க்கும் அதிகமானோர் பயணித்தனர்.[4][5] 2010-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 2016-ஆம் ஆண்டு வரை இந்த வழித்தடத்தில் 17 கி.மீ. (10.6 மைல்) நீட்டிப்புகள் செய்யப்பட்டன. 13 புதிய நிலையங்கள் சேர்க்கப்பட்டன. புதிய முனையம் தற்போது புத்ரா அயிட்ஸ் (Putra Heights) என்ற இடத்தில் உள்ளது. இந்த இடத்தில் கிளானா ஜெயா வழித்தடம் செரி பெட்டாலிங் வழித்தடத்துடன் (Sri Petaling Line) இணைகிறது.[6] கிளானா ஜெயாகிளானா ஜெயா, (Kelana Jaya); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள புற நகர்ப் பகுதி. பெட்டாலிங் ஜெயாவில் உள்ள SS3, SS4, SS5, SS6 மற்றும் SS7 ஆகிய குடியிருப்புப் பிரிவுகளை உள்ளடக்கியது. டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை இந்தப் பகுதியின் வழியாகச் செல்கிறது. பிரபலமான பாரடிகம் மால் (Paradigm Mall) எனும் பேரங்காடியும் இங்கு உள்ளது. எண்ணிடப்பட்ட பிரிவுகள்சுபாங் ஜெயா; கிளானா ஜெயா போன்ற பகுதிகளை எஸ்.எஸ். (SS) என்று வகைப்படுத்தி உள்ளார்கள். எஸ்.எஸ்.என்பது சுங்கைவே - சுபாங் (Sungai Way-Subang) என்பதன் சுருக்கம் ஆகும். பெட்டாலிங் ஜெயாவில் உள்ள முகவரிகள் தரப்படுத்தப்பட்டு உள்ளன. பெட்டாலிங் ஜெயா நகரம் எண்ணிடப்பட்ட பிரிவுகளாக (செக்சன்) பிரிக்கப்பட்டு உள்ளது.[7] கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 10 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள நகரங்கள் டாமன்சாரா, பத்து தீகா, கெப்போங், சிகாம்புட் பூச்சோங், சா ஆலாம் மற்றும் கிள்ளான். கிளானா ஜெயா நிலையங்கள்கிளானா ஜெயா வழித்தடத்தில் 37 எல்ஆர்டி இலகுத் தொடருந்து (LRT) நிலையங்கள் உள்ளன. அவற்றின் விவரங்கள்: கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia