யமுனா விரைவுவழிச்சாலை
யமுனா விரைவுவழிச்சாலை, 156 கி.மீ நீளமுள்ள ஆறு வழிச்சாலையாகும். இது இந்திய நகரங்களான நொய்டா பெருநகரையும் ஆக்ராவையும் இணைக்கிறது. இது இந்தியாவில் உள்ள மற்ற ஆறு வழிச்சாலைகளை விட நீளமானதாகும். இந்த திட்டத்துக்கு மொத்தமாக ₹128.39 பில்லியன் (ஐஅ$1.5 பில்லியன்) செலவானது.[1] இந்த விரைவுவழிச்சாலை நொய்டா பெருநகரில் தொடங்கி, கான்பூரையும், ஆக்ராவையும் நோக்கி செல்லும் இரண்டாம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள குபேர்பூரில் முடிவடைகிறது. 168 கி.மீ நீளமுள்ள 13 சேவை சாலைகளும் போடப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக இந்த விரைவுவழிச்சாலையை அடையலாம். ![]() ஒவ்வொரு 5 கி.மீட்டர்களுக்கும் ஒரு சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு 25 கி.மீட்டர்களுக்கும் ஒரு காவல்துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் இந்த சாலையில் ஒரு லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.[2] மேலும் பார்க்கசான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia