புத்ராஜெயா வழித்தடம்
புத்ராஜெயா வழித்தடம் அல்லது புத்ராஜெயா கொமுட்டர் வழித்தடம் (ஆங்கிலம்: Putrajaya Line அல்லது Putrajaya Komuter Line; மலாய்: Laluan Putrajaya அல்லது Laluan Komuter Putrajaya) என்பது மலேசியா, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எம்ஆர்டி (Mass Rapid Transit) தொடருந்து வழித்தடம் ஆகும். இந்த வழித்தடம் மலேசிய நாட்டின் மூன்றாவது முழு தானியங்கி மற்றும் ஓட்டுநர் இல்லாத தொடருந்து வழித்தடமாக அறியப்படுகிறது. முன்பு இந்த வழித்தடம் எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடம் (MRT Sungai Buloh–Serdang–Putrajaya Line) (SSP Line) என அறியப்பட்டது. குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்தில் இருந்து புத்ராஜெயா சென்ட்ரல் வரை நீண்டு செல்லும் இந்த வழித்தடமானது; செரி டாமன்சாரா, கெப்போங், பத்து, ஈப்போ சாலை, செந்தூல், கம்போங் பாரு, துன் ரசாக் சாலை, கோலாலம்பூர் கோபுரம், துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச், கூச்சாய் லாமா, செரி கெம்பாங்கான் மற்றும் சைபர்ஜெயா போன்ற மக்கள் அடர்த்தியான பகுதிகள் வழியாகச் செல்கிறது. பொதுகுவாசா டாமன்சாரா மற்றும் கம்போங் பத்து ஆகிய புறநகர்ப் பகுதிகளின் இடையிலான பாதையின் முதல் கட்டச் செயல்பாடுகள் 16 சூன் 2022-இல் தொடங்கின.[3] 2023 மார்ச் 16-ஆம் தேதி நிலத்தடி சுரங்கப்பாதை உட்பட மீதமுள்ள பாதையை உள்ளடக்கிய 2-ஆம் கட்டம் திறக்கப்பட்டது.[4] அதிகாரப்பூர்வ போக்குவரத்து வரைபடங்களில், இந்த வழித்தடத்தின் எண் 12 என மஞ்சள் நிறத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த வழித்தடம் எம்ஆர்டி நிறுவனத்திற்கு (MRT Corp) சொந்தமானது. 11 நிலத்தடி நிலையங்கள்ஆனாலும் ரேபிட் ரெயில் (Rapid Rail) நிறுவனத்தின் மூலம் ரேபிட் கேஎல் (Rapid KL) சேவையின் ஒரு பகுதியாக இயக்கப்படுகிறது. அத்துடன் இது கிள்ளான் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு (Klang Valley Integrated Transit System) எனும் இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. இந்த வழித்தடம் மொத்தம் 57.7 கிமீ (35 மைல்) நீளம் கொண்டது. இது மலேசியாவின் மிக நீளமான மெட்ரோ பாதையாகும். இந்த வழித்தடத்தில் 13.5 கிமீ நிலத்தடி சுரங்கப் பகுதி உள்ளது. மொத்தம் 41 நிலையங்கள்; அவற்றில் 11 நிலையங்கள் நிலத்தடியில் கட்டப்பட்டு உள்ளன. கட்டுமானம்![]() ![]() ![]() புத்ராஜெயா வழித்தடத் திட்டம் மார்ச் 2015-இல் மத்திய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. மற்றும் 2015-ஆம் ஆண்டு மலேசிய வரவு செலவு திட்டத்தில் இந்த வழித்தட அமைப்பிற்காக RM 23 பில்லியன் ஒதுக்கப்பட்டது.[5] நவம்பர் 2015 இல் கட்டுமானம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[6] செப்டம்பர் 2016-இல், முன்னாள் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால் புத்ராஜெயா சென்ட்ரல் நிலையத்தின் தளத்தில் அடிக்கல் நாட்டு விழாவுடன் அதிகாரப்பூர்வமாக கட்டுமானம் தொடங்கியது. புதிய மத்திய அரசுமே 2018-இல் பாரிசான் நேசனல் தலைமையிலான மத்திய அரசு வீழ்ச்சி அடைந்தது. அதன் பிறகு, புதிய பாக்காத்தான் அரப்பான் தலைமையிலான மத்திய அரசு எம்ஆர்டி2 MRT2 எனும் புத்ராஜெயா வழித்தடத் திட்டத்தை தள்ளி வைத்தது. அதற்கு, நாட்டில் பெருகிவரும் தேசியக் கடன் பிரச்சினை; மற்றும் நேரடி ஒப்பந்தச் செயல்முறை (Direct Negotiation Tender Process) தொடர்பான பிரச்சினைகளை மேற்கோள் காட்டியது.[7] இந்த முடிவு புத்ராஜெயா வழித்தடத்தின் முதன்மைக் கட்டுமான குத்தகையாளரான எம்எம்சி கமுடா நிறுவனத்திடம் (MMC-Gamuda) இருந்தும்; மற்றும் அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களிடம் இருந்தும் நிறைய எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. ஏனெனில் சுமார் 20,000 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழக்கும் நிலையில் இருந்தனர்.[8][9] புதிய குத்தகைஎனினும் பல்வேறு தரப்புகளில் இருந்து ஏற்பட்ட தாக்கத்தினால் மறு குத்தகைக்கு முன்மொழியப்பட்டது. எம்எம்சி கமுடா நிறுவனம் புதிய குத்தகைக்கு உடன்பட்டது. அந்த நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட கட்டுமானச் செலவுகள் முன்பு இருந்ததை விட பாதியாகக் குறைந்தது.[10] நிலத்தடிச் சுரங்கப் பகுதியைக் கட்டுவதற்கான செலவு மட்டும் RM 13.11 பில்லியன் ஆகும். புதிய குத்தகையின் மூலம் இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவு RM 39.35 பில்லியனில் இருந்து RM 30.53 பில்லியனாகக் குறைந்தது. அத்துடன் இதன் தொடர்ச்சியாக, எம்எம்சி கமுடா நிறுவனம், கட்டுமானத்தை மீண்டும் தொடங்கியது. அதன் பின்னர் கட்டுமான வேலைகள் சிற்சில பிரச்சினைகளுடன் சுமுகமாக நடைபெற்றது.[11] மொத்தச் செலவு 30.53 பில்லியன் ரிங்கிட்எம்ஆர்டி2 புத்ராஜெயா வழித்தடத் திட்டம் 16 மார்ச் 2023 மார்ச் 16-ஆம் தேதி, பிற்பகல் 3 மணிக்கு செர்டாங் கொமுட்டர் நிலையத்தில் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. 16 மார்ச் 2023 முதல் 31 மார்ச் 2023 வரை; புத்ராஜெயா வழித்தடத்தில் இலவசப் பயணங்களும் வழங்கப்பட்டன.[12][13] இந்தத் திட்டத்திற்கான மொத்தச் செலவு RM 30.53 பில்லியன். (3053 கோடி மலேசிய ரிங்கிட்) நிலத்தடிச் சுரங்கப் பகுதியைக் கட்டுவதற்கான செலவு மட்டும் RM 13.11 பில்லியன் (1311 கோடி மலேசிய ரிங்கிட்). கிள்ளான் பள்ளத்தாக்கு வழித்தடங்கள்
புத்ராஜெயா வழித்தடக் காட்சி![]() புத்ராஜெயா வழித்தட நிலையங்கள்புத்ராஜெயா வழித்தடத்தில் 41 நிலையங்கள் உள்ளன. அவற்றுள் 28 நிலையங்கள் உயர்த்தப்பட்ட நிலையங்கள்; பகுதி நிலத்தடி 1 நிலையம்; நிலத்தடி நிலையங்கள் 4;
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia