பொட்டாசியம் குளோரைடு
பொட்டாசியம் குளோரைடு (Potassium chloride, KCl) என்பது பொட்டாசியம், குளோரைடு ஆகியவற்றைக் கொண்ட ஒரு உலோக உப்பீனிய சேர்மம் ஆகும். மணமற்ற இந்த உப்பு வெண்ணிறம் அல்லது நிறமற்ற கண்ணாடிப் படிகத்தைப் போன்றதாகும். நீரில் எளிதில் கரையக்கூடியது, உப்பின் சுவையைக் கொண்டது. பொட்டாசியம் குளோரைடு உரமாகவும்,[6] மருத்துவம், உணவு பதப்படுத்தல் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் உயிர்-போக்கும் ஊசி ஏற்றும் மரணதண்டனை முறைக்குப் பயன்படுத்தப்படும் மூன்று-மருந்துகள் அடங்கிய கலவைக்கு இதய நிறுத்தம் ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது மருந்தாகவும் இது கலக்கப்படுகிறது. இது இயற்கையாக சில்வைட்டு கனிமமாகவும், சில்வைனைட்டு படிகத்தில் சோடியம் குளோரைடுடனும் கிடைக்கிறது.[7] தயாரிப்பு![]() பொட்டாசியம் குளோடைடு சில்வைட்டு, கார்னலைட்டு, பொட்டாசு ஆகிய கனிமங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது கடல்நீரில் இருந்தும் பிரித்தெடுக்கப்படுகிறது. அத்துடன் பொட்டாசியம் நைத்திரேட்டு, ஐதரோகுளோரிக் காடி ஆகியவற்றில் இருந்து நைத்திரிக்கு அமிலத் தயாரிப்பில் துணை-விளைபொருளாகவும் பெறப்படுகிறது. ஆய்வுக்கூடத்தில் தயாரிப்புபொட்டாசியம் குளோரைடு அதிக செலவில்லாமல் பெறப்படுவதால், ஆய்வுக்கூடத்தில் மிக அரிதாக தேவைக்காக மட்டும் தயாரிக்கப்படுகிறது. ஆய்வுக்கூடத்தில் இது பொட்டாசியம் ஐதராக்சைடு (அல்லது வேறு பொட்டாசியம் காரங்களை) ஐதரோகுளோரிக் காடியுடன் சேர்ப்பதால் பெறப்படுகிறது:
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia